Thursday, December 12, 2019

ஊடகங்களுக்கு எவ்விதத் தலையீடுகளும் எமது அரசில் இருக்காது! உறுதியளிக்கின்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் ஊடக சுதந்திரத்தில் அரசாங்கம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று உறுதியளித்துள்ளார்.

நாட்டிற்கும் நாட்டின் நற்பெயருக்கும் பயனளிக்கும் வகையில் அனைத்து ஊடக நிறுவனங்களும் நாட்டிற்கான தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறேன் என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில்ஜனாதிபதி மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் இடையே நடந்த கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பல அபிலாஷைகளுடன் மக்கள் அவரை நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததாக அவர் கூறினார். இந்த நோக்கத்தை அடைய ஊடகங்கள் அவருக்கு உதவுமென நம்புவதாக ஜனாதிபதி கூறினார்.

"சர்வதேச அளவில் முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை உருவாக்குவதில் நாட்டின் பிம்பம் மிகவும் முக்கியமானது. எனவே, நாட்டின் பிம்பத்தை கட்டியெழுப்ப ஊடகங்களுக்கு பரந்த பொறுப்பு உள்ளது" என்று அவர் கூறினார்.

சமீபத்தில் பேசிய சுவிஸ் தூதரகத்தின் தலைவர் இது தொடர்பாக ஊடகங்களின் நடத்தை குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.


இந்த சம்பவத்தை சர்வதேச ஊடகங்கள் தேவையற்ற முறையில் முன்னிலைப்படுத்த முயன்றதற்கு ஜனாதிபதி தனது வருத்தத்தை தெரிவித்தார். இது யாருடைய கோரிக்கையல்ல, நாட்டை நேசித்த ஒரு நட்சத்திரத்தின் வேண்டுகோள் என்று ஜனாதிபதி கூறினார்.

நாட்டை நேசிப்பவர்களை ஊக்குவிப்பதில் ஊடகங்களின் பங்கின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com