Thursday, December 12, 2019

புதிய அரசாங்கத்தின் வெற்றியில் எனக்கும் மகிழ்ச்சியே! சிங்களவன் யாரென்று காட்டினான் சிங்கள இனம்!

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் அமைச்சர் மர்வின் சில்வா கூறுகிறார்.

1956 பின்னர் முதன் முறையாக சிங்களவர்கள் தங்கள் சக்தியைக் காட்டியுள்ளதாகவும், பெளத்த மதகுருமார்கள் தங்களது சக்தியைக் காட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

முஸ்லிம்களும் தமிழர்களும் இல்லாமல் ஓர் அரசாங்கத்தை உருவாக்க முடியாது என்ற கருத்து, இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மூலம் சிதைந்துள்ளது என்றுஅவர் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com