Monday, December 2, 2019

கடும் மழையினால் நாடெங்கிலும் 14 164 பேர் பாதிப்பு

13 மாவட்டங்களில் 4,153 குடும்பங்களைச் சேர்ந்த 14,164 பேர் பலத்த மழை மற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

946 குடும்பங்களைச் சேர்ந்த 3149 பேர் 29 பாதுகாப்பான இடங்களில் வசித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி இயக்குநர் (ஊடகம்) பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.

பதுளை, மட்டக்களப்பு, அம்பாறை,மன்னார், முல்லைதீவு, கேகல்லை, கண்டி, புத்தளம், மாத்தளை, கிளிநொச்சி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,634 குடும்பங்களைச் சேர்ந்த 5,335 நபர்களை பாதித்த புத்தளம் மாவட்டமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com