Tuesday, November 5, 2019

தன்னை விடுதலை செய்தமையையிட்டு CID இனருக்கு நன்றி தெரிவிக்கார் Dr. ஷாபி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்த குருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபி ஷஹாப்தீன், சிங்களத் தாய்மார்கள் கர்ப்பம் தரிக்காதிருப்பதற்காக ஆவன செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அரசியல் அல்லது பிற அழுத்துங்களினால் அண்மையில் அவர் விடுதலை செய்யப்பட்டார். மிகவும் அமைதியாக இருந்த அவர் நேற்று முன்தினம் சண்டே டைம்ஸ் பத்திரிகை நேர்காணலில் இரண்டு முக்கிய நபர்களுக்குத் தனது விஷேட நன்றியைத் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சாணி அபயசேக்கர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் திஸேரா இருவருக்குமே அவர் நன்றி தெரிவித்துள்ளார். வைத்தியர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின்போது நடுநிலைமையாகச் செயற்பட்டமை தொடர்பிலேயே அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com