Sunday, November 17, 2019

பொலன்னறுவை முழுமையாக கோத்தாவுக்கு!

2019 ஜனாதிபதித் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தின் வாக்கெடுப்புக்கள் முழுமையாக முடிவடைந்துள்ளன. அதன் பெறுபேறுகளும் வெளியாகியுள்ளன.

அதற்கேற்ப, பொலன்னறுவை மாவட்டத்தில் 147,340 வாக்குகளைப் பெற்று அதாவது, 53.01% வீத வாக்குகளைப் பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றியீட்டியுள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்தின்மின்னேரியா, மெதகிரிய, பொலன்னறுவை எனனும் அனைத்து தேர்தல் பிரிவுகளிலும் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றியீட்டியுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 112,473 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இது ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகளில் 40.47% ஆகும்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க 12,284 வாக்குகளையே பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். 4.42% வீதமே இவர் பெற்றுள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 326,443 ஆகும். அதில் 280,487 வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன. இதில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,563 ஆகும்.

தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவே முன்னணியில் உள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com