Sunday, November 17, 2019

கோத்தாவின் வெற்றியை உத்தியோக பூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது. நாளை அனுராதபுரத்தில் பதவியேற்பு.

இலங்கையின் 7 வது ஜனாதிபதிக்காக நேற்று 16.11.2019 ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

அவ்வறிவிப்பின் பிரகாரம்

கோத்தபாய ராஜபக்ச 6,924,255 (52.25%)
சஜித் பிறேமதாஸ 5,564,239 (41.99%) வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

நாளை அனுராதபுரத்தில் புதிய ஜனாதிபதி பதவிபிரமானம் செய்து கொள்வார் என பொதுஜன பெரமுனவின் உள்ளகவட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அதேநேரம் பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்படுவார் என்றும் அதற்கான உடன்பாட்டை ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com