Saturday, November 16, 2019

முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து....

ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து, இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பின் முடிவாக இன்று (16) நள்ளிரவிற்கு முன்னர் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அதற்கேற்ப, வாக்குப் பெட்டிகள் வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்கள் 43 இல் இந்த வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com