Saturday, November 16, 2019

வாக்களிப்பு ஆரம்பமாகிவிட்டது.... பொலிஸார் உசார் நிலையில்...!

ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்புக் கருதி, ஆவன செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியுமான ருவன் குணசேக்கர குறிப்பிடுகையில், ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுக்கும் இரு பொலிஸார்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார்.

இன்று (16) நடைபெறும் தேர்தலுக்காக பூரண ஒத்துழைப்பினை பொலிஸ் வழங்கும் என்றும், பொலிஸ் பாதுகாப்புத் தவிர மேலும் அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும்நடமாடும் பொலிஸ் வருகையையும் செயற்படுத்துவதற்கு ஆவன செய்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

இன்று அதிகாலை 7 மணி தொடக்கம் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதுடன், அதற்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை அளித்துவிட்டு, வாக்களிப்பு நிலையங்களின் பக்கமாக சூழ்ந்துகொண்டு நிற்காமல், தங்களுடைய அன்றாட வேலைகளில் ஈடுபடுமாறும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com