Monday, November 11, 2019

நாங்கள் ஐதேகவினதும் மவிமுயினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளைப் பெறுவோம்! - வீரகுமார திசாநாயக்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது ஆதரவை கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வழங்குவது அவரைத் தோற்கடிக்கவல்ல அவரை வெற்றிபெறச் செய்யவே என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்தா திசானநாயக்க கூறியுள்ளார்.

அனுராதபுரத்தின் ஹோரோபத்தானாவில் நடைபெற்ற இலங்கை சுதந்திரக் கட்சி தேர்தல் வாரியக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீரகுமாரா திசாநாயக்கவும் கலந்து கொண்டு தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் உரையாற்றும்போது,

“கோத்தபாய ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதி... அதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. அதனால்தான் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம். யாராவது விட்டுச் சென்றால், 10 அல்லது 15 வாக்குகள் இல்லாமலாகும். எங்களிடமிருந்து 10 வாக்குகள் சென்றால், நான் 100 வாக்குகளைப் பெறுவதற்கு ஆவன செய்வேன். இது 10 கள் செல்வதல்ல பிரச்சினை... 100 ஐ உருவாக்க முடியுமா என்பதுதான் பிரச்சினை. நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியினதும், மக்கள் விடுதலை முன்னணியினதும், முஸ்லிம்களினதும் வாக்குகளைப் பெறுவோம். " எனக் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com