Thursday, November 7, 2019

இனி ஒருபோதும் ஐதேக வுடன் இணைய மாட்டேன்... ! வசந்த

இனி ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதற்கான எண்ணப்பாடு இல்லை எனவும், தன்மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுக்களை தொடர்ந்து பொறுத்துக்கொண்டு இருக்கவியலாது எனவும் அமைச்சர் வசந்தா சேனாநாயக்க குறிப்பிட்டார்.

நாடு எதிர்பார்க்கும் அரசியல் முடிவு இன்று எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இன்று (07) கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

கட்சியை விட்டு வெளியேறிய போதிலும் அரசியலில் இருந்து விலகப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் சஜித் பிரேமதாசவுக்கான வெற்றிக்கு ஒத்துழைப்பதிலிருந்து தூரத்தில் நிற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com