Thursday, November 7, 2019

கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியும் ஹிஸ்புல்லாவுக்கு கதவை இழுத்து மூடியுள்ளது.

அண்மையில் அழையாவிருந்தாளியாக அல்-ஹாமியா அரபுக் கல்லூரியினுள் நுழைந்த ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லா அங்கு புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை தனது தேர்தல் பிரச்சார பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றார்.

இவ்விடயத்தினை அறித்த கல்லூயின் பொதுச் செயலாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா விஜயம் செய்தமை கண்டிக்கத்தக்கது என அறிவித்துள்ளார்.

அல்-ஹாமியா அரபுக் கல்லூரி (கல்முனை ஹிமாயதுல் இஸ்லாம் அமைப்பின்) பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.ஏ.நளீர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 04.11.2019 அன்று அல்-ஹாஹாமியா அரபுக் கல்லூரிக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புள்ளா விஜயம் செய்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அவற்றை தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது அவரது கேவலமான அரசியலை பிரதி பலிக்கின்றது.

மௌலவி மும்தாஜ் மதனி என்பவர் கல்வி நடவடிக்கைக்களுக்காக கல்லூரிக்கு விஜயம் செய்யவிருப்பதாகவே ஏற்கனவே அறிவிக்க்ப்பட்டிருந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஹிஸ்புள்ளா வருகை தந்திருந்தார் என்பதுடன் இந்நடவடிக்கைக்கு மத்ரஸா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com