Wednesday, November 27, 2019

சென்ற அரசாங்கக் காலத்தில் ஏற்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் பற்றி ஆராய ஆணைக்குழு!

சென்ற நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கல்களை ஆராய்வதற்காக மிக விரைவில் ஆணைக்குழு ஒன்றினை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி காேட்டாபய ராஜபக்ஷ இன்று ஒன்றுகூடிய அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் முன்னேற்றத்திக்காக தீர்மானங்களை எடுக்கும் அரச உத்தியோகத்தர்களைப் பாதுகாப்பதற்காகவும் சட்ட ஒழுங்குகளை மேற்கொள்ளவுள்ளதாகவும்அமைச்சரவையின் இணை ஊடகப் பேச்சாளர் ரமேஷ் பதிரண குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com