Sunday, November 24, 2019

பொலிஸாரின் உதவிக்காக நாங்கள் இராணுவத்தைப் பயன்படுத்துவோம்!

அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டால் மட்டுமே நாங்கள் பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்துவோம் என பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஓய்வுபெற்ற மேஜருமான ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

மிகிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதியைச் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், அரசியல் தொடர்பில் ஏற்படும் பிளவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com