Wednesday, November 6, 2019

சந்திரிக்காவின் கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கு ஆப்புவைக்கிறது ஸ்ரீசுக மத்தியகுழு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமரதுங்காவின் ஆதரவின் கீழ் நேற்று (05) சுகததாச உள்ளக மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மாநாட்டில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தொகுதிகளின் அமைப்பாளர்களுக்குப் பதிலாக தொகுதிகளுக்கு பதில் கடைமபுரியக்கூடிய அமைப்பாளர்களை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய மத்திய குழு தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில்கடமையாற்றும் தலைவர் பேராசிரியர் ரோஹான லக்ஷ்மன் பியதாசவின் தலைமையின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தின்போதே இந்த் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவை கட்சியின் ஆலோசகர் பதவியிலிருந்து நீக்குவதற்கும் அவரது கட்சி உறுப்புறுமையை நீக்குவதற்கும் கட்சி உயர்பீடம் தீர்மானித்ததாக பரவலாக செய்தி அடிபட்டிருந்தபோதும், நேற்றிரவு கூடிய கூட்டத்தில் அதுதொடர்பில் எந்தவிதக் கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com