Sunday, November 24, 2019

சஜித்தின் புதிய கட்சிக்கான முன்னேற்பாடு!

சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியைத் தராதுவிட்டால், மாற்றுச் சக்தியொன்றைக் கட்டியெழுப்புவதற்கு வழிசெய்யப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் ஆதரவாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மீண்டும் ஒருமுறை மக்கள் மத்தியில் செல்ல வேண்டும் என்பது சஜித் பிரேமதாசவின் எதிர்பார்ப்பாக உள்ளதுடன், பல மக்கள் சந்திப்பினை ஏற்படுத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப, எதிர்வரும்பொதுத்தேர்தலுக்கு முன்னர் 22 மாட்டங்களையும் உள்ளடக்கி சஜித் பிரேமதாசவின் மக்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளன.

தேசிய நாளிதழ் ஒன்றுக்குக் திஸ்ஸ அத்தநாயக்க கருத்துத் தெவிக்கும்போது: பெரும்பாலும் மாற்றுக் கட்சியொன்று உருவாவதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளதெனக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com