Saturday, November 30, 2019

ஜனாதிபதியின் வேலைத்திட்டம் ஆரம்பம்! பிச்சைக்காரர்களுக்கு 'நோ எக்ஸிகியுஸ்'

பிச்சை ஏந்தும் யாசகர்களை அவர்கள் உள்ள இடங்களிலிருந்து அகற்றுமாறு மேல் மாகாணத்திற்குட்பட்ட சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் தெளிவுறுத்தியுள்ளது.

பதில் கடமையாற்றும் பொலிஸ் மாஅதிபரின் கட்டளையின் பேரில் இந்த அறிவுறுத்தலை மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் அபேசிரி குணவர்த்தன வழங்கியுள்ளார்.

அதற்கேற்ப இடைஞ்சல் விளைவிக்கும் வகையில் மேல் மாகாணத்தினுள் பிச்சையில் ஈடுபடுகின்ற நபர்களை ஹம்பாந்தோட்டை ரிதியகம பிரதேசத்தில் அமைந்துள்ள பிச்சைத் தடுப்பு மையத்திற்கு அனுப்பிவைப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் நாளை முதல் புகைவண்டியினுள் பிச்சையில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக புகையிரதச் சேவைத் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது.

இதற்கு முன்னரும் இவ்வாறாதொரு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தபோதும், அது நடைமுறைச் சாத்தியமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com