Tuesday, November 12, 2019

கோத்தாவை வெற்றிபெறச் செய்ய ரீஎன்ஏவின் உதவி தேவையில்லை! வரதராஜப் பெருமாள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் வாக்குரிமையை அவர்களின் விருப்பின்பேரில் திருப்பிக்கொள்வதற்கு முயற்சிசெய்தாலும், கோத்தபாய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் தேவையில்ைல என வடக்கு - கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலாவது முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் முல்லைதீவில் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக பொதுஜன பெரமுனவிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுகின்ற கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஏற்பாடுசெய்யப்பட்டடிருந்த மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நாட்களில் வடக்கில் இடம்பெற்றுவருகின்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் கூட்டங்களில் பெரும்பான்மையாகக் கலந்துகொள்ளு் தமிழ் மக்களைக் காணும்போது, தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாயைக்குள் மயங்கிய காலம் மலையேறி விட்டது என்பதும் அவர்களால் சிந்தித்துச் செயலாற்ற முடியும் என்பதும் தெளிவாகின்றது என்றார்.

தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலிப் பேச்சுக்களுக்கு மக்கள் மயங்கியதற்கான காரணம் அவர்கள் கொடிய யுத்தத்திற்குள் மாட்டிக்கொண்டு, வெளிவந்ததனால்தான். தற்போது அவர்களுக்கு உண்மையென்றால் என்னவென்று தெரிகின்றது, இப்போது அவர்கள் யாரை விரும்புகின்றனரோ அவருக்கு வாக்களிப்பார்கள்...

தமிழ் மக்களின் தமிழ் அரசியலையும் பிளவுபடுத்தியது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே என்றும் அதன்மூலம் சஜித் பிரேமதாச அரசியல் லாபம் பெருவார் என்றும் வரதராஜப் பெருமாள் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com