Sunday, November 24, 2019

பா.உ விலிருந்து நீக்கினால் வழக்குத் தொடர்வேன்! பெளஸி

தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இல்லாமற் செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முயன்றால், அதற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்தார்.

தன்னைப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கவுள்ளதாக கட்சியிலிருந்து தனக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அவ்வாறு தன்னை 'மந்திரி'ப் பதவியிலிருந்து விலக்குவதற்கு கட்சிக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

தன்னைக் கட்சியிலிருந்து நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மந்திரிப் பதவியொன்றை வழங்குவதற்கே கட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com