Sunday, November 24, 2019

ஜனாதிபதி கோட்டாபயவின் இந்தியாவுக்கான பயணத்தில் குடும்பத்தார் இல்லை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்தியப் பயணத்தில் எண்மர் கொண்ட தூதுக்குழுவினரும் செல்வதற்கு ஏற்பாடாகியுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ. ஜயசுந்தர, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவினாத்த ஆரியசிங்க, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்டோரும் இந்தப் பயணத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 29 ஆம் திகதியிலிருந்து இந்தியப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அத்துடன், நவம்பர் மாதம் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்புவார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com