Monday, November 11, 2019

தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல் - ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு.

ஊடகவியலாளர்கள் தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல் மற்றும் முடிவுகளை வெளியிடுதல் தொடர்பான செயலமர்வு பிறைட் மீடியா நெற்வேர்க் நிறுவனத்தின் அனுசரணையில் சென்றல் ரீ.வி மற்றும் சிலோன் மீடியா போரம் இணைந்து நடாத்தவுள்ளது.

இச்செயலமர்வு எதிர்வரும் (12) செவ்வாய்க்கிழமை காலை 9.09 மணி தொடக்கம் மதியம் 12.12 மணி வரை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இச்செயலமர்வுக்கு ஓய்வுபெற்ற முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.எம்.முஹம்மட் வளவாளராக கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல், முடிவுகளை வெளியிடுதல் மற்றும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பில் தேர்தல் தொடர்பான சரத்துக்கள், தேர்தல் காலங்களில் ஊடக ஒழுக்க நெறி தொடர்பாகவும் விளக்கமளிக்கவுள்ளார்.

இச்செயலமர்வு 50 ஊடகவியலாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இச்செயலமர்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் தங்களது முழுப் பெயர், விலாசம், தே.அ.அட்டை இலக்கம், செய்தியாளராக கடமையாற்றும் ஊடக நிறுவனம், ஈமெயில், கைபேசி இலக்கம் போன்ற விபரங்களை பின்வரும் வாட்ஸ்ஆப் இல: 0772539298 இலக்கத்திற்கு உடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

செயலமர்வின் இறுதியில் பங்குபற்றும் ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


(றியாத் ஏ. மஜீட், எஸ்.அஷ்ரப்கான்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com