Friday, November 1, 2019

தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எதிராக எவ்வித சகிப்புத்தன்மையும் இருக்காதாம். சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று வெளியாகியிருந்தது. நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தின் இழப்புக்களை தனிப்பட அனுபவித்தவன் என்ற வகையில், இந்த நாட்டின் எந்த ஒரு பிரஜையின் மீதும் பயங்கரவாதத்தின் வினைகள் தாக்கிவிடக்கூடாது என்பதில் கடுமையான உறுதி பூண்டிருக்கின்றேன். தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எவ்வித சகிப்புத் தன்மையும் அறவே இல்லாத அறவழியுத்தம் ஆரம்பிக்கப்படும் என நான் உறுதியளிக்கின்றேன். ஒரு விரிவான செயற்திட்டத்துடன் சேர்த்து தேசிய பாதுகாப்பை கையாள சிறந்த நபர்களை நியமிப்பேன். சட்டவாக்க நியமங்களுடாக எவ்வித அரசியல் தலையீடுமின்றி நம் நாட்டின் அனைத்து பிரஜைகளையும் பாதுகாக்க அவர்களுக்கு பூரண அதிகாரம் வழங்கப்படும்.

தேர்தல் விஞ்ஞாபனத்தினை முழுமையாக இங்கே வாசிக்கமுடியும்..




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com