Wednesday, October 9, 2019

ஜனாதிபதி மைத்திரி இறங்குகிறார்.... சுதந்திரக் கட்சியின் தலைமைப்பதவி ரோ.ல. பியதாஸவிடம் செல்கிறது...

பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாஸ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் கடமையாற்றும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிரி ஜயசேக்கர இதுதொடர்பில் குறிப்பிடும்போது, ஜனாதிபதித் தேர்தல் காலப்பிரிவுக்காகவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார் என நேற்று பி.ப இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள வாக்குவாதங்களே இதற்குக் காரணம் எனவும் தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒத்துழைப்பு நல்குவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com