Wednesday, October 16, 2019

தேர்தலுக்கு முன்னர் கருணா அம்மானை போட்டுத்தள்ள முயலும் சுவிஸ் புலிகள்!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில்கருணா அம்மானைக் கொலை செய்வதற்காக கிளிநொச்சியிலிருந்து ஆயுதங்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன என ஒன்றிணைந்த புலனாய்வுத் தேடல்களின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கு வருகைதந்துள்ள சுவிஸ் புலிகள் வலையமைப்பின் தலைவர்களினாலேயே கொலைக்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என புலனாய்வுப் பிரிவினர்களுக்குத் தெரியவந்துள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவு இதுதொடர்பில் நீண்ட காலமாக விசாரணைகள் மேற்கொண்டு வந்ததன் பின்னர், எனும் இல. 442 அம்பாள்குளம், கிளிநொச்சி எனும் முகவரியில் வசித்துவந்த ஜோசப் பீட்டர் ரெபின்சன் (36) என்ற புலி உறுப்பினர் ஒரு கைதுசெய்யப்பட்டு, ஏ.ரீ. 56 துப்பாக்கியொன்றுடன் சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த புலிப் பயங்கரவாதியின் கிளிநொச்சியில் அமைந்திருந்த வீட்டைச் சோதனையிட்டபோது, ரீ56 துப்பாக்கியொன்று, சிறிய கைத்துப்பாக்கிகள் மூன்று, குண்டுகள் 05, தூரே பாய்ந்துசெல்லும் அரைத் தன்னியக்க ரய்ஃபல் 01, புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் பொதிந்த 04 ரீசேட்டுக்கள், துப்பாக்கி ரவைகள், குண்டுகளை வெடிக்கச் செய்கின்ற டெட்டனேட்டர்கள் 62 உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் நேற்று முன்தினம் (13) கண்டுபிடிக்கப்பட்டன.

அத்துடன் சந்தேகநபரின் வீட்டில் வாழ்ந்துவந்த அவரது மனைவியும் சகோதரியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புலிகள் இந்த வலையமைப்பானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் திருகோணமலையை கேந்திரநிலையங்களாகக் கொண்டு இந்தியாவுக்கு வருகைதந்துள்ள சுவிஸ் புலித் தலைவர்களில் ஒருவனால் செயற்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் தலைதூக்குவதற்குத் தயாராகின்ற புலிகளை, இராணுவப் புலானாய்வுப் பிரிவினர் பின்தொடர்ந்து பெற்ற தகவல்களுக்கு ஏற்பவே இந்தக் கண்டுபிடிப்புக்கள் வெறும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் நடைபெற்றுள்ளன.

குறித்த புலிகளின் வலையமைப்புப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக ஒற்றர்களை அனுப்பி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது, அவர்களின் இலக்காக இருப்பவர் கருணா அம்மான் எனவும். அவரை கிழக்கில் கொலை செய்யத் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 2018 ஜுன் மாதம் ஒட்டுச்சுட்டான் - புதுக்குடியிருப்பில் கரனின் புலிகள் வலையமைப்பினைச் சுற்றிவளைத்துப் பிடித்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் நீண்ட விசாரணைகளினாலும் தேடல்களினாலுமே கருணா அம்மனைக் கொலை செய்வதற்காக உபயோகிக்கப்படவுள்ள ஸ்னைஃபர் ஆயுதங்கள் இரண்டு கிழக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை பற்றித் தெரியவந்துள்ளது. அந்த ஆயுதம் குமான்குளம் என்ற இடத்தில்தான் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

கருணா அம்மானைக் கொலை செய்வதற்காக மட்டும் ஸ்னைபர் ஆயுதம் கிழக்கிற்குக் கொண்டுவரப்படவில்லை எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கிழக்கில் வைத்துக் கொலைசெய்வதற்குமே என அக்காலப் பிரிவில் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தேடல்களினால் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சியில் கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் புலிப்பயங்கரவாதிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com