Monday, October 7, 2019

பிரேதக் குழியிலிருந்து ஆயுதங்கள் மீட்பு. ரெலோவுடையதா?

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அலஸ்தோட்டம் பிரதேச மாயானத்தின் நல்லடக்கத்திற்காக குழியொன்றை வெட்டியபோது ஆயுதப்பெட்டி ஒன்று வெளிவந்துள்ளது. இவ்வாயுதங்கள் புலிகள் அமைப்பு அல்லது இந்திய இராணுவத்தினர் திருகோணமலையில் நிலைகொண்;டிருந்தபோது அவர்களுடன் சேர்ந்தியங்கிய த்றீஸ்டார் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களது ஆயுதங்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஆ-17 யுடி-2 வர்க்க ரி 56 துப்பாக்கிகள் 5 , எஸ்.எம்.ஜி-1, ரி 56 துப்பாக்கி மகஸீன் 5, எஸ்.எம்.ஜி- மகஸீன் 3, ரி 56 துப்பாக்கி சன்னங்கள் 1700, 9 எம்.எம் துப்பாக்கி சன்னங்கள் 32 என்பன அடங்குகின்றன. இவையாவும் பாவிக்கக்கூடிய நிலையிலேயே காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இந்திய இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கிய ரெலோ அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இந்திய இராணுவத்தினர் நாட்டைவிட்டு வெளியேறும்போது, ஆயுதங்களை வடகிழக்கின் பல பகுதிகளில் புதைத்து வைத்துவிட்டு தப்பியோடிய முன்னாள் த்றீஸ்டார் அமைப்பினர் அவ்வாயுதங்களை பின்னாட்களில் பாதாளக்குழுக்களுக்கும் முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்களுக்கும் விலைக்கு விற்றிருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com