Tuesday, October 29, 2019

இருதலைக்கொள்ளி எறும்பாக ஜனாதிபதி மைத்திரி!

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் தனது நிலைப்பாடு பற்றி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க முன்வரவுள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தலின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் சுயாதீனமாக செயற்படுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். தான் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலகட்டத்தில் தன்னால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும், கொடுத்த வாக்குறுதிகள் பற்றியும் தெரிவிக்கவுள்ளார்.

சென்ற ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றி ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விடயங்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என அவரது ஆதரவாளர்களும் தற்போது சஜித் பிரேமதாச ஆதரவாளர்களும் மைத்திரிபால சிறிசேனவைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடுமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் அகில விராஜ் காரியவசம், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, லக்ஷ்மன் கிரிஎல்ல ஆகியோர் சார்ந்த 15 அமைச்சுக்கள் ஊழல், முறைகேடுகள் பற்றிய அறிக்கையில் உள்ளடங்கியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com