யாழ்ப்பாணத்தில் 38.8 கிலோ ஆமை இறைச்சியுடன் பெண் கைது
யாழ். மாதகல் பகுதியில் ஆமை இறைச்சியுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் இன்று (09) கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, ஆமை இறைச்சியுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
வட கடற்படை கட்டளைப் பிரிவினரும் இளவாலை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, மாதகல் பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 38.8 கிலோகிராம் ஆமை இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாதகல் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்டுள்ள ஆமை இறைச்சியுடன் சந்தேகநபரை மேலதிக நடவடிக்கைகளுக்காக இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்
0 comments :
Post a Comment