Wednesday, September 11, 2019

சவேந்திர சில்வா நியமனம் இலங்கையின் இறையான்மைக்குட்ப்பட்ட விடயம் - ஐ.நாவுக்கான இலங்கை தூதுவர்

இலங்கை இராணுவத்தளபதியின் நியமனத்தைப் பொறுத்தவரை, அது நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட வகையில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானமாகும்.

அத்தீர்மானம் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் வெளியகத் தரப்புக்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தேவையற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாதவையும் ஆகும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதுவர் ஏ.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்துள்ளார்.

வெறுப்புணர்வுப் பேச்சுக்களை முற்றாகத் தோற்கடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் இன்னமும் முயற்சிகளை எடுத்துவரும் அதேவேளை, அது இனமத அடிப்படையில் சில சமூகத்தவரை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கு எதிராகவும் மத ரீதியான அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்பதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உறுதிபூண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியான தூதுவர் ஏ.எல்.ஏ.அஸீஸ் இன்றைய அமர்வில் ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com