ரணில் - சஜித் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிந்தது
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXdJ7ZBC9FeeY0kwwCoiUDMXnWfB6lgy5ti4KdxZQZNkiQyJN5pT6pwySfVURabXZtxNtSFiCeYFb4qNgAq8LQ_dMeI1UbpAHQlTGa4s6do5gNbIdN2WAmRrkTIOryo1Lu3yg_yxp93dQ/s200/sajith-ranil-1.jpg)
அந்தப் பேச்சுவார்த்தையானது நேற்று இரவு (10) இரவு 9.30 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் நியமிக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கலந்தாலோசிப்பதற்காகவே இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச இருவருக்குமிடையில் இப்பேச்சுவார்த்தை சென்ற ஞாயிறன்றே இடம்பெறவிருந்தது. என்றாலும், அது நேற்றைய தினத்திற்குப் பிற்போடப்பட்டது.
தனக்கும் பிரதமருக்கும் இடையே மிகவும் மிகச் சிறப்பாக இந்த உரையாடல் நடைபெற்றதாகவும், எதிர்வரும் இரண்டு மூன்று தினங்களுக்கும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவிருக்கின்றது என அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்தார்.
0 comments :
Post a Comment