Friday, September 6, 2019

போரா சம்மேளத்தில் கலந்துகொள்வோருக்காக அறுக்கப்படுகின்றன ஆயிரமாயிரம் பசுக்கள்! மிருக அகிம்சாவாத தேசிய அமைப்பு விசனம்

இலங்கையில் தற்போது இடம்பெற்றுவருகின்ற போராக்களின் சம்மேளத்தில் கலந்துகொள்வோரின் உணவுத் தேவைக்காக, ஒரு தடவையில் அறுக்கப்படுகின்ற பெருமளவு மாடுகள் தொடர்பில் 'மிருக அகிம்சாவாத தேசிய அமைப்பு' அதுதொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளது.

'மிருக அகிம்சாவாத தேசிய அமைப்பு'ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. கொழும்பை மைய இடமாகக் கொண்டு நடாத்தப்பட்டுவரும் போரா அமைப்பின் பாரிய சம்மேளனத்திற்காக பல்வேறு நாடுகளிலும் இருந்து இருபத்தோராயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பிரசுரமாகியிருந்தன. கொழும்பு நகரில் விஷேடமாக கொள்ளுப்பிட்டியிலிருந்து கல்கிஸ்ஸ வரையிலான பிரதேசங்களில் இருக்கின்ற ஓட்டல்களும், வாடிவீடுகளும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டு அவர்கள் அவற்றில் இருக்கின்றார்கள் எனவும் பத்திரிகை மற்றும் சமூக வலைத்தள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

பத்து நாட்கள் வரை நடைபெறும் இந்தச் சம்மேளனத்தில் பங்குபற்றுகின்ற மக்கள் கூட்டத்தினருக்கு வழங்கப்படுகின்ற முக்கிய உணவாக மாட்டிறைச்சி வழங்குவதற்காக அதிகளவிலான மாடுகள் நாளாந்தம் ஒரே தடவையில் அறுக்கப்படுவதாக எங்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன.

சட்ட ரீதியாக அன்றி, மாடறுத்தல் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்சென்று, கொலை செய்யப்படுகின்ற இந்த செயற்பாட்டின் பின்னணியில் இந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் இருக்கின்றார்கள் எனத் தெரியவருகின்றது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கட்டாக்காலிகளாக அலைந்து திரிகின்ற மாடுகள், அவற்றின் குட்டிகள், குட்டி ஈனும் தருவாயிலுள்ள மாடுகள், நோயுடன் உள்ள பசுக்கள் என்பன சட்டரீதியாக அன்றி, தடிகளினாலும் கூரிய ஆயுதங்களினாலும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு, இம்சைப்படுத்தப்பட்டு வேன்களிலும், சிறிய வாகனங்களிலும் ஏற்றப்பட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மாடறுக்கும் இடங்களுக்கு இரவோடு இரவாக கள்ளத்தனமாகக் கொண்டுசெல்லப்படுகின்றன எனவும் தெரியவருகின்றது.

மாடறுப்பு சம்பந்தமாக தற்போது நடைமுறையிலுள்ள சட்ட திட்டங்களை கணக்கிற்கொள்ளாது, அப்பாவி மாடுகள் கொலை செய்யப்படுவதற்கு காரணமாக உள்ள இந்தச் சம்மேளனத்திற்காக ஒத்துழைப்பு வழங்கியுள்ள அரசியலாளர்கள், அந்நிகழ்ச்சிக்கு அநுசரணை வழங்கியுள்ள போரா நதியில் மீன் பிடிக்கின்ற சில வியாபாரிகள் மட்டுமன்றி, இந்தப் பாவச் செயலுக்காக பல்வேறு வழிகளிலும் உதவியோர் அனைவருக்கும் இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாவார்கள் என்பது உறுதி என்பதை நாங்கள் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.


கலாநிதி டிக்கிரி பண்டார எட்டிபொல
இணைச் செயலாளர்
மிருக அகிம்சாவாத தேசிய அமைப்பு

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com