Thursday, September 5, 2019

எங்கும் சஜித் அலையே வீசுகிறது.... கோத்தா பாவம்! -

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு மக்கள் அலை வீசுவதில்லை என்றும், அவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து மக்கள் ஆதரவோ கூட்டங்களுக்கு வருகின்ற மக்களின் தொகையோ இன்றுவரை அதிகரிக்கவில்லை என அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிடுகிறார்.

சஜித் பிரேமதாசவிற்கான அனைத்துக் கூட்டங்களும் வெற்றியின் எல்லையை அடைந்திருப்பதாகவும், மக்கள் திரண்டிருப்பது அவருக்காகவே என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளராக பிரேமதாசவின் பெயர் குறிப்பிடப்பட்டதன் பின்னர், தாமரை மொட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விழாவொன்றின் இறுதி நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com