Thursday, September 19, 2019

ஐ.தே.மு பாராளுமன்ற குழு கூட்டத்தில் முக்கிய முடிவு!

ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

மேற்படி கூட்டத்தில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு வலியுறுத்தி ஐம்பதிற்கும் அதிகமானோர் கடிதமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

குறித்த கடிதம் நாளை (20) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தப்படவுள்ளது.

இன்றைய சந்திப்பில் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட சில ஐ.தே.மு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ள போதிலும், குறித்த கடிதத்தில் கைச்சாத்திடவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com