Thursday, September 19, 2019

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தர்ப்ப வாதிகள். போட்டுடைக்கின்றார் சஜித் பிறேமதாஸ!

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதை எதிர்க்கும் நல்லாட்சிக் குழுக்களுக்காக வருத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஒரு ட்விட்டர் செய்தி மூலம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பது தொடர்பில், அக்குழுவின் சந்தர்ப்பவாதம் நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாகவுள்ள கூட்டத்தினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை இழக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜே.வி.பி ஏற்கனவே ஒரு தனித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், நல்லாட்சி குழுவிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அகற்ற பிரதமர் மூலோபாய ரீதியில் செயல்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். திரு. பிரேமதாச ஒரு வேட்பாளர் என்றாலும், அவர் ஏற்கனவே ஒரு மில்லியன் வாக்குகளை இழந்துள்ளார் என்பது அவர்களின் கருத்தாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com