Thursday, September 5, 2019

எல்பிடிய உள்ளுராட்சித் தேர்தல் முடிவு ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்விதத்திலும் தாக்கம் செலுத்தாது! சம்பிக்க

எல்பிடிய உள்ளுராட்சித் தேர்தலில் முடிவு ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்விதத்திலும் பாதிப்பினைச் செலுத்தாது என மேல்மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

'பிற்போன பிரதேச சபைத் தேர்தலினால் எவ்வாறு அனைத்து முடிவுகளையும் கணிப்பது? 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியது. ஆனாலும் சில மாதங்களுக்குப் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவியது.

'அது எவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் தாக்கம் செலுத்தும்? ஜனாதிபதித் தேர்தல் என்பது முழு நாட்டு மக்களும் ஒன்றிணைந்து ஒன்றாக வாக்கினைப் பயன்படுத்துவதாகும். எல்பிடிய தேர்தல் என்பது அப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான தேர்தலாகும். எல்பிடியத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலில் எவ்விதத்திலும் தாக்கம் செலுத்தாது.' எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com