Friday, September 27, 2019

இலங்கையில் மேற்குல நாடுகளின் தலையீட்டுக்கு அனுமதியில்லை - கோட்டாபய

இலங்கையின் இறையாண்மையில் சர்வதேச மேற்குலக நாடுகள் தலையீடு செய்வதற்கு ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இராணுவத்தினரை அனைத்துலக நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று, மனித உரிமை மீறல்களை புரிந்ததாக குற்றம்சாட்ட முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்பதுடன், யுத்தத்தில் ஈடுபட்ட படையினரை பாதுகாப்பேன் எனவும் கூறினார்..

இராணுவத்தினரின் குடும்பங்கள் மத்தியில் நேற்று முன்தினம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில்

படையினரை அனைத்துலக நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று, மனித உரிமை மீறல்களை புரிந்ததாக குற்றம்சாட்ட முயற்சிகள் நடக்கின்றன. அவ்வாறு நடப்பதற்கு பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. நாட்டைப் பிளவுபடுத்த எவரையும் அனுமதிக்கமாட்டேன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com