நிதியமைச்சினை என்வசம் தந்தால் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவேன்! - தயா
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivAtOrSLP0LS2eGzRjb5OiViyWFSP74JiwZCTwEg7xrl8eCV6l2_PGy8wRNv1jN2OXnDcSB4X3NtXqvin6Ub3YcWOenUyg87EJldM4vXKdlNLlMe21R4d1UbLvUzDqTOfAYYyAz0qJniA/s200/daya.jpg)
இன்று நிதியமைச்சின் செயற்பாடுகள் மிகவும் பயனற்ற முறையில் இருந்துவருவதாகக் குறிப்பிட்ட அவர், நிதியமைச்சைத் தன் பொறுப்பில் கையளித்தால் தன்னால் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப இயலும் எனவும் குறிப்பிட்டார்.
நிதி இல்லை எனக்கூறி ஒருபோதும் நிற்கவில்லை எனவும், முதலீட்டுவதிலுள்ள இடர்பாடுகள் என்ன என்பதை இனங்கண்டு, அதற்குத் தேவையான தீர்வினைப் பெற இயலும் எனவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வீணாகப் பணத்தைச் செலவளிக்க மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமரின் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment