Monday, September 16, 2019

நீங்கள் அதே கதிரையில் உட்காருங்கள்.. ஒன்று, வேட்பாளர் சஜித் எனச் சொல்லுங்கள்!

ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமித்துவிட்டு, ரணில் விக்ரமசிங்கவுக்கு அதே பிரதமர் பதவியில் தொடர்ந்தும் இருக்குமாரே நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள், ரணில் விக்ரமசிங்கவினதும், கரு ஜயசூரியவினதும் ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளராக வர வேண்டும் என்பதே கட்சியின் எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் நெருக்கடி குறித்து நேற்று (15) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com