Thursday, September 26, 2019

திலீபனை பதவியிறக்கம் செய்துவைத்துள்ளார் மேயர் ஆனோல்ட!

புலிகள் அமைப்பின் உறுப்பினராகவிருந்து எட்டமுடியாத இலக்குகளை முன்வைத்து இறந்தவர் திலீபன். அவரது நினைவு நாள் இன்று யாழ்ப்பாணத்தின் இடம்பெற்றது. இந்நினைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நிபந்தனை விதித்துள்ளனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்கள்.

அதாவது திலீபன் புலிகள் அமைப்பை சேர்ந்தவனான அடையாளங்களை கொண்டிருக்கும் பட்சத்தில் அந்நிகழ்வில் தம்மால் கலந்து கொள்ள முடியாது என்றும் திலிபனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பால் ஒரு பொது மகனுக்கு செலுத்தும் அஞ்சலியே செலுத்தமுடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே தீலிபனுக்கு வழங்கப்பட்டுள்ள லெப்டினட் கேணல் பதவிநிலை கழையப்பட்ட நிலையிலேயே தாம் கலந்து கொள்வது என்ற முடிவை எடுத்துள்ளனர். அதன்பிரகாரம் திலீபனுக்காக அமைக்கப்பட்டிருந்த கட்டவுட்களில் காணப்பட்ட லெப் கேணல் என்ற பதவியை கழற்றுமாறு கட்டளையிட்டுள்ளார் யாழ் மாநகர மேயர் ஆனோல்ட்.

அதன் பின்னர் கட்டவுட்களில் எழுதப்பட்டிருந்த „லெப் கேணல்' என்ற பதவி கறுப்பு ஸ்ரிக்கர்களால் மறைக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டபின்னரே அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அவ்விடத்திற்கு சென்றதாக அறியமுடிகின்றது.

திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்தார் என்று கூறப்பட்டாலும் அவர் புலிகள் அமைப்பினால் நயவஞ்சகமாக கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி பலருக்கும் தெரியாத விடயமாகும். திலீபன் ஒரு கடும் நோயாளி. நோயாளி ஒருவர் அஹிம்சை போராட்டங்களில் ஈடுபடமுடியாது என்ற விதிகளை மீறி புலிகள் அவரை உண்ணாவிரதத்தில் இறக்கினர்.

உடல்நிலை பாதிப்படைந்தபோது உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத திலீபன் உண்ணா விரதத்தை கைவிடுகின்றேன் தண்ணியை தாங்கோடா என மேடையிலிருந்து சத்தமிட்டார் ஆனால் அவரை புலிகள் உண்ணவிரதத்தை கைவிட அனுமதியாது மரணமடையச் செய்தனர். உடனடியாக மக்களை அவர் இருந்த மேடையிலிருந்து அவர் தண்ணி கேட்கும் சத்தம் கேளாத தூரத்திற்கு அப்பால் வேலி அமைத்து விரட்டிய புலிகள் அந்த மேடையில் திலீபனை பலவந்தமாக வைத்திருந்து கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com