Thursday, September 26, 2019

ஐ.நா வின் அமைதிகாக்கும் படையிலிருந்து இலங்கை இராணுவம் வெளியேற்றம். ஆட்சி மாற்றம் உறுதியானது!

எதிர்வரும் காலங்களில் இலங்கைப் இராணுவத்தினரை ஐ.நா அமைதிப்படையில் இணைத்துக் கொள்வதை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைதி காப்புத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.

மேற்படி முடிவினை ஐ.நா பேச்சாளர் பர்ஹான் ஹக் நேற்று நியுயோர்க்கில் அறிவித்துள்ளார்.

தமது இந்த அதிரடி முடிவுக்கு காரணம் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்:

பாதுகாப்புக்கு அவர்களின் பங்கு மிகஅவசியமானது என்ற சூழல் தவிர்ந்த நிலையில், சிறிலங்கா இராணுவத்தின் புதிய படைப்பிரிவுகள் இனிமேல் ஐ.நா அமைதிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படாது என்றும், ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

'தற்போது ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவ அணி மற்றும் அதிகாரிகளை கொழும்புக்கு அனுப்பும் பணி அடுத்தமாதம் ஆரம்பமாகும்.

சுழற்சி முறையில், அவர்களின் பணி நிறைவுக் காலத்தின் அடிப்படையில், இவர்கள் வெளியேறுவார்கள். இவர்களுக்குப் பதிலாக புதிய படையினர் சிறிலங்காவில் இருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள்.

ஐ.நாவின் ஆறு அமைதிகாப்பு நடவடிக்கைகளில் சிறிலங்கா பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. ஆனால் அதனை லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம், குழப்பி விட்டது என்றும் அவர் நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.

அதேநேரம் இதுவரை காலம் இலங்கைப் படையினர் மேற்கொண்ட சேவைகளுக்கு அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் ஐ.நா வின் இச்செயற்பாடானது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று நிகழவுள்ளது என்பதனை உறுதி செய்துள்ளது. கடந்தமுறை ஜனாதிபதி தேர்தலின்போது தமக்கு ஏதுவான அரசாங்கம் ஒன்றை நிறுவி இலங்கை வழங்களை சுரண்டிக்கொண்டிருந்த மேற்குலகம் தற்போது ஆட்சி மாற்றத்திற்கானதோர் ஏதுநிலை தென்படுகையில் நிலைமைகளை இறுக்கி பேரம்பேசலுக்கான வசதிகளை உருவாக்கி கொள்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com