Friday, September 13, 2019

ஏழு பாகிஸ்தான் பிரஜைகளுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை

ஹெரோயின் போதை பொருளை நாட்டுக்கு இறக்குமதி செய்த குற்றத்திற்காக 7 பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஹெரோயின் போதை பொருளை இறக்குமதி செய்தமை, அவற்றை சூட்சுமாக விற்பனை செய்தமை ஆகிய குற்றங்களுக்காக சந்தேக நபர்களை பொலிஸ் போதைப் பொருள் பணியகம் கைது செய்தது.

6 பாகிஸ்தானிய பிரஜைகள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்டவர்கள் சுங்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் போதைப் பொருள் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னரே நீதிமன்றத்தால் இந்த தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த 7 சந்தேக நபர்களும் 3 குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டதை அடுத்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 28.08.2019 ஆம் திகதி அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com