Friday, September 13, 2019

இலங்கையின் வெற்றிக்களை அங்கீகரிக்க வேண்டும் - ஐ.நாவின் வதிவிட பிரதநிதி தயானி மென்டிஸ்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட பல சவால்களுக்கு மத்தியில் இலங்கை பெற்றுள்ள வெற்றிகளை அங்கீகரிக்க வேண்டும் என இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிட பிரதநிதி தயானி மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 42 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றும் போது அவர் இதனை கூறியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது..

கடந்த 2015 ஆம் ஆண்டில் கட்டாயப்படுத்தப்படல் மற்றும் பலவந்தமாக காணாமல் போனமை தொடர்பில் ஆராயும் செயற்குழு அளித்த பரிந்துரைகள் குறித்தும் நான்கு வருட பின்னணி தொடர்பிலும் தயானி மென்டிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்காலத்தில் எந்தவொரு கட்டாய காணாமல் போகும் செயலும் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வதற்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் கடந்த 2018 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் முன்னேற்றகரமானது என அவர் கூறினார்.

அதேபோல் இலங்கை அரசும், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கமைய எந்தவொரு தடுப்புக்காவலுக்கு செல்வதற்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் காணாமல் போனவர்கள் குறித்து ஆராய மூன்று சுயாதீன அலுவலகங்களை அமைத்தல், மனித உரிமைகள் அல்லது மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கு உள்ளானவர்களுக்கு நட்டஈட்டை வழங்க ஒரு அலுவலகத்தை நிறுவுதல் ஆகியன இதற்குள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட பல சவால்களுக்கு மத்தியில் தான் உள்ளிட்ட அனைத்து இலங்கை பிரஜைகளினது மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படுவதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி தயானி மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com