Tuesday, September 24, 2019

வடக்கு சட்டத்தரணிகள் வெள்ளிக்கிழமை பணி பகிஸ்கரிப்பு

பௌத்த மதகுருவின் உடலம் எரிப்பது தொடர்பில் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கின்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன்,நீதிமன்ற அவமதிப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவின் பெயரில் சென்ற சட்டத்தரணிகள் தாக்கப்பட்டுள்ள சம்பவத்தினை கண்டித்து; இன்று வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவினை மீறி பௌத்த மதகுருவின் உடலம் எரிக்கப்பட்டமை சட்டத்தரணிகள் மற்றும் ஆலயபூசகர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினை கண்டித்து முல்லைத்தீவு பழைய வைத்தியசாலைக்கு முன்பாக இருந்து மக்கள் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை நடத்தி மாவட்ட செயலம் வரை சென்றடைந்துள்ளனர்.இதன்போது முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் வாயில் கறுப்பு துண்டை கட்டி தங்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு சட்டத்தரணிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதன்போது  கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம்

வடமாகாணத்தினை சேர்ந்த சட்டத்தரணிகள் நூற்றிற்கு மேற்பட்டவர்கள் இன்று முல்லைத்தீவு நீதிமன்றின் முன்பாக ஒன்று கூடினோம்.
நேற்று நடைபெற்ற சம்பவத்திற்கு எதிராக சட்டத்தரணிகள் பணிபுறக்கணிப்பினை மேற்கொண்டோம். இந்த சந்தர்பத்தில் நீதிமன்றத்தின் செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்பட்டதற்கு இன்று தங்கள் நீதியினை கோரி திரண்ட மக்களுக்கு சட்டத்தரணிகள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எங்களுக்கு தோழோடு தோழ் நின்று பணி பகிஸ்கரிப்பினை மேற்கொண்ட கிழக்கு மாகாண சேர்ந்த சங்க சட்டத்தரணி நண்பர்கள் நண்பிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.இன்றையதினம் வடக்கினை சேர்ந்த சட்டத்தரணிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒன்றுகூடி நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் தீர்மானங்கள் எடுத்துள்ளோம்.

தென்னிலங்கையில் இருந்து வெளிவருகின்ற ஆங்கில சிங்கள நாளிதழ்களில் நேற்று நடைபெற்ற சம்பவம் திரிவு படுத்தப்பட்டதாக காணப்படுகின்றது எனவே அது தொடர்பான தெளிவான அறிக்கை வெளியிடுவது.

நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்வது.மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்வது எமது தாய்ச்சங்கத்திற்கு இங்கு நடைபெற்ற விடையங்கள் தொடர்பில் எடுத்துக்கூறுவது.
குறிப்பாக நேற்று நடைபெற்ற வழக்கு தொடர்பாக இடம்பெற்ற சம்பவங்கள் குறிப்பிட்ட ஒரு பௌத்த மதகுரு வழக்கு தீர்ப்பு வழங்குவதற்கு முன்னரே வெளியில் நின்று நீதிமன்றம் எந்த தீர்ப்பினை தந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதில்லை தாங்கள் நினைத்ததைத்தான் செய்வோம் என்று நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயலாக செய்தியினை சொல்லியுள்ளார்.

இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பபது நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் மூன்று நாட்களுக்குள் எழுத்துமூலமான வாக்குறுதி ஒன்றினை வழங்கவேண்டும் இதனை கருத்தில் கொண்டு சட்டத்தரணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை வடமாகாணத்தினை சேர்ந்த சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.என்றார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com