Monday, September 9, 2019

பணிப்போருக்கு மத்தியில் நாளை ரணில் சஜித் சந்திப்பு

பணிப் போருக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நாளை (10) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று நடைபெறவிருந்தது.

எனினும், இந்தக் கலந்துரையாடல் பிற்போடப்பட்டதால், நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக முன்நிறுத்தினால், அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை அனைவரிடமும் காணப்படுவதாக நியூஸ்பெஸ்ட்டுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அதனால் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை முன்நிறுத்துவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் அஜித் பி. பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com