Monday, September 9, 2019

ருஹூணு பல்கலைக்கழத்தில் பகிடிவதையில் ஈடுப்பட்ட 19 மாணவர்களுக்கு விளக்கமறியல்

பகிடிவதை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ருஹூணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்கள் இந்த மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை நீதவான் நீதிமன்ற நீதிபதி இசுறு நெத்திகுமார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.ருஹூணு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை கொடூரமான முறையில் பகிடிவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் அந்த பல்கலைக்கழகத்தின் மாணவ தலைவன் உட்பட இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் 19 மாணவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

சித்திரவதைக்கு முகம் கொடுத்த மாணவன் தான் எதிர்நோக்கிய அசம்பாவிதம் தொடர்பான காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதுடன், ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து விடயங்களை கூறியிருந்தார்.

அதன்படி, சந்தேகத்திற்கிடமான மாணவர்களை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com