Friday, September 13, 2019

எல்பிட்டியாவை வெல்வது எனக்கு ஒரு முக்கியமல்ல... ஜனாதிபதி வேட்பாளராவதே குறிக்கோள்! - சஜித்

தற்போது சவாலாக இருப்பது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதே என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.

அவ்வாறன்றி, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வெற்றி கொள்வது அல்ல என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின் தங்கள் திறமையை எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியீட்டிக் காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்தும், எதிர்க்கட்சியிடமிருந்தும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடப்பட்டிருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com