Monday, September 2, 2019

மாட்டுக்கூட்டங்களுக்குக் கூட தலைவன் உண்டு...ஆனால் சிங்களவர்களுக்கு மட்டும் தலைமைத்துவம் இல்லை....- ஞானசாரர்

இலங்கையை இன்னுமே வெள்ளையர்கள் ஆட்சி செய்வார்களாக இருந்தால், இந்நாட்டின் செல்வம் பிறநாடுகளுக்குச் செல்லாதிருந்திருக்கும் என பொதுபல சேனாவின் செயலாளர் நாயகம் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

நாவலப்பிட்டி பவ்வாகம ஸ்ரீ தர்மராஜ மகா பிரிவினவில் நேற்று இடம்பெற்ற உபன்னியாச நிகழ்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:

கட்சிகளுக்குத் தலைவர்கள் இருந்தாலும் அந்தத் தலைவர்கள் எமது நாட்டின் வளங்களை பிற நாடுகளுக்கு தாரை வார்க்கவே செய்கிறார்கள். அந்தத் தலைவர்களினால் எமது நாட்டின் சமயம், மதம் மற்றும் கலாச்சாரம் - பண்பாடு என்ற அனைத்தும் முழுமையாக மாற்றமடைந்து ஒன்றுமே இல்லாதுள்ளது.

''48 காலப் பகுதியிலிருந்து இன்று வரை நாங்கள் முன்னேறிச் செல்லவில்லை. மாறாக பின்னடைவையே நாேக்கிச் செல்கிறோம். வெள்ளையர்கள் இருந்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்.

வெள்ளையர்கள் இருக்கும்போது கொழும்புத் துறைமுகத்தின் தென்பகுதியை விற்கவில்லை.

துறைமுகத்தின் ஒரு பகுதி விற்கப்பட்டுள்ளது. ஆனால் பணமும் இல்லை அபிவிருத்தியும் இல்லை.

ஹம்பாந்தோட்டைத் துறைமுத்தை விற்றார்கள்.. பணமும் இல்லை.. செய்த காரியங்கள் ஏதுமில்லை...

வெள்ளையர்கள் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அன்று இந்த வளங்கள் ஏதும் விற்கப்படவில்லையே...

போட்டி மனப்பான்மையே எங்கும் காணப்படுவதால் மனிதர்களிடமிருந்த மனிதாபிமானம் இல்லாதொழிந்தது...''

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com