செப்டம்பர் 15 இற்குப் பின்னர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்! - மகிந்த
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxhnGM-uTLRGgRdM_s2pHyC-kakoXN2WKvT6TEnUbRGNWZalpuP19P75ZC34XF2dpOMrCoVgpZ_5vj3bmon03mMOj4607SeLM_7gYQ5gaYBDVUgOv8JmHTuavoj0EI-XjqzfaivTY6m1k/s200/image_1520368723-ca40da9006.jpg)
செப்டம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடுவதற்கான சட்ட அங்கீகாரம் உள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 44 நாட்களுக்குப் பின்னரும்,65 நாட்களுக்கு உள்ளாகவும், ஒரு நாளில் தேர்தல் நடத்தப்படும்.
தேர்தலுக்கு முன்னர், தேர்தல் வன்முறைகளை தடுப்பது குறித்து நாடெங்கும் கருத்தரங்குகள் நடத்தப்படும்.
அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment