82 மில்லியன் ரூபாவைச் செலுத்தாதிருந்துவருகிறது மெண்டிஸ் நிறுவனம்! குற்றம் சுமத்துகிறார் வசந்த
அர்ஜுன் அலோசியஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான மதுபான நிறுவனம் கடந்த சில மாதங்களாக மதுவரித் திணைக்களத்திற்குச் செலுத்த வேண்டிய எண்பத்திரண்டு மில்லியன் ரூபாவைச் செலுத்தாதிருப்பதாக ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அமைப்பு வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
அவ்வமைப்பின் இணைப்பாளர் வசந்த சமரசிங்க குறிப்பிடும்போது, 15 நாட்களுக்கு அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வெற் வரி மற்றும் தேசியத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரிப்பணத்திற்கு உரித்தான நான்காயிரத்து நானுாறு மில்லியன் ரூபா பணத்தொகையையும் செலுத்தாது, அதனைப் பற்றி எவ்வித அக்கறையுமின்றியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.
மெண்டிஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய வரித்தொகை பற்றி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதும் அவ்விடயத்தில் அந்நிறுவனம் எவ்வித முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ளவில்லை எனக் குற்றம் சுமத்துகின்ற வசந்த சமரசிங்க தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த வரி செலுத்தாமையின் பின்னணியில் இருப்பதாகச் சந்தேகமும் வெளியிட்டுள்ளார்.
அவ்வமைப்பின் இணைப்பாளர் வசந்த சமரசிங்க குறிப்பிடும்போது, 15 நாட்களுக்கு அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வெற் வரி மற்றும் தேசியத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரிப்பணத்திற்கு உரித்தான நான்காயிரத்து நானுாறு மில்லியன் ரூபா பணத்தொகையையும் செலுத்தாது, அதனைப் பற்றி எவ்வித அக்கறையுமின்றியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.
மெண்டிஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய வரித்தொகை பற்றி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதும் அவ்விடயத்தில் அந்நிறுவனம் எவ்வித முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ளவில்லை எனக் குற்றம் சுமத்துகின்ற வசந்த சமரசிங்க தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த வரி செலுத்தாமையின் பின்னணியில் இருப்பதாகச் சந்தேகமும் வெளியிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment