Thursday, August 29, 2019

மைத்திரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மைத்திரி - மகிந்த சந்திப்பு


இறுதித் தீர்மானத்திற்காக அடுத்த வாரம் மீண்டும் சந்திப்பு


ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ இருவரும் நேற்று முன்தினம் இரவுவேளை மஹகமசேக்கர மாவத்தையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தை மிகச் சிறப்பாக இடம்பெற்றதாக இரு கட்சிகளினதும் நம்பகத்தன்மை வாய்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

30 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இரு கட்சிகளும் ஒன்றிணைந்து இறுதி முடிவினை எடுப்பதற்காக, தலைவர்கள் இருவரும் அடுத்த வாரமும் கலந்தாலோசிப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com