Tuesday, August 6, 2019

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட அல்பிரட் துரையப்பாவின் பேரன் கனடிய பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரியாக நியமனம்!

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள பீல் (Peel) பிராந்தியத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக முதன்முறையாக இலங்கை தமிழர் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் பீல் பிராந்தியத்தின் புதிய தலைமை பொலிஸ் அதிகாரியாக, ஹால்டன் பிராந்தியத்தில் பிரதி பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த நிஷான் துரையப்பாவை நியமித்துள்ளனர்.

ஒன்டாரியோ பிராந்தியத்திற்கு நியமிக்கப்பட்ட முதலாவது தென் ஆசிய தலைமை பொலிஸ் அதிகாரி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹால்டன் பிராந்தியத்தில் இருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு பீல் நகர பிராந்திய பிரதி பொலிஸ் தலைமை அதிகாரியாக நியமனம் பெற்றார்.

25 ஆண்டுகள் சேவை அனுபவம் கொண்டுள்ள நிஷான், குற்ற விசாரணைப் பிரிவின் கீழ், போதைப் பொருள் ஒழிப்பு, துப்பாக்கி, பாதாள உலக குழுக்கள் தொடர்பான விடயங்களை கையாண்டுள்ளார். அவர் சிறப்பு அதிரடிப்படை பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.

ஒக்டோபர் 1 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸ் சேவைகள் சபை அறிவித்துள்ளது.

3000 காவலர்களை கொண்டுள்ள பீல் பிராந்திய பொலிஸுக்கு தலைமை அதிகாரியாக பணியாற்றுவது உண்மையிலேயே பெருமையான விஷயம். சிறப்பாக கடமையாற்றுவேன் என நிஷான் துரையப்பாவை தெரிவித்துள்ளார்

அவரை பீல் நகரத்துக்குட்பட்ட மிஸிஸிசவ்ஹா மேயர், போன்னி கிரோம்பி வரவேற்றுள்ளார். நகரத்தை பாதுகாப்பாக வைத்துகொள்ள இணைந்து செயலாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிஷ் என அழைக்கப்படும் நிஷான் துரையப்பா என்பவர் யாழ்ப்பானத்தின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையாப்பாவின் பேரன் என தெரிவிக்கப்படுகின்றது.

1975 ஆம் ஆண்டு அல்பிரட் துரையாப்பா படுகொலை செய்யப்பட்ட பின்னர் இவர்கள் கனடாவின் பீல் பிராந்தியத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இதன்போது நிஷான் துரையப்பா 3 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அல்பிரட் துரையாப்பா படுகொலையே இலங்கையில் இடம்பெற்ற முதலாவது அரசியல் படுகொலை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com