Wednesday, August 7, 2019

பள்ளிவாசல்களிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை மீளளிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கிறார் சோபித்த தேரர்....

இஸ்லாமிய அடிப்படைவாத குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து பள்ளிவாசல்களில் இருந்து பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்ட வாள் உட்பட ஏனைய ஆயுதங்களை உரிமையாளர்களிடமே  மீள ஒப்படைப்பது சட்டத்திற்கு முரணானது என்பதுடன் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலானது என  சோபித்த தேரர் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 திகதி உயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் நாட்டில் பயங்கரவாதிகளினால்முன்னெடுக்கப்பட்ட ஒரு தாக்குதல் என்று ஒருபோதும் கருத முடியாது. தொடர்ந்து தாக்குதலை  பல்வேறு  வழிமுறைகளில் முன்னெடுப்பதற்கான உரிய  உபாயங்கள்  திட்டமிடப்பட்டுள்ளன.

ஆகவே ஏப்ரல் 21  உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் ஒன்றும் பயங்கரவாதிகளின் இறுதித் தாக்குதல் அல்ல என்றும் கூறினார்.

பள்ளிவாயல்களிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை விடுவித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு நட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com